நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ரஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு உதய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த அன்றே டில்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து அவர்களது திருமண வரவேற்புக்கு அழைப்பு விடுத்தனர்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து ராஷ்மிகா மந்தனா, பிரதமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்து, சற்று முன்பு எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஐயா, நமது கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றிப் பேசுவதில் நேரத்தைச் செலவிட்டது மிகவும் சிறப்பு வாய்ந்தது. என் பெற்றோருக்கு அவர் எழுதிய சிந்தனைமிக்க கடிதம்தான் மிகவும் இனிமையான ஆச்சரியம். சில தருணங்கள் என்றென்றும் உங்களுடன் இருக்கும்..,” என்று குறிப்பிட்டுள்ளார்.