நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் |

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி' ஆகிய படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இதனை இயக்குனர் அட்லியின், 'ஏ பார் ஆப்பிள்' புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தபோது விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனால் தள்ளிச்சென்ற இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கம் அமைத்து நடத்தியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு இன்னும் கதாநாயகி கிடைக்கவில்லை என்பதால் ஒரு வார படப்பிடிப்பு பிறகு ஒரு மாத இடைவெளியில் விஜய் சேதுபதி மீதமுள்ள பூரி ஜெகநாத் படப்பிடிப்பிற்கு செல்வார் என கூறப்படுகிறது.




