தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி' ஆகிய படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இதனை இயக்குனர் அட்லியின், 'ஏ பார் ஆப்பிள்' புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தபோது விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனால் தள்ளிச்சென்ற இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கம் அமைத்து நடத்தியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு இன்னும் கதாநாயகி கிடைக்கவில்லை என்பதால் ஒரு வார படப்பிடிப்பு பிறகு ஒரு மாத இடைவெளியில் விஜய் சேதுபதி மீதமுள்ள பூரி ஜெகநாத் படப்பிடிப்பிற்கு செல்வார் என கூறப்படுகிறது.