ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி | 10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன் | அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகராக லோகேஷ் கனகராஜ் | என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் |

71வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் இருதினங்களுக்கு முன் வழங்கப்பட்டன. ஜிவி பிரகாஷ், எம்எஸ் பாஸ்கர், ஊர்வசி, ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல மாநில திரைக்கலைஞர்கள் ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்றனர். மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
‛நாள் 2' என்ற மராட்டிய படத்திற்காக திரிஷா தோஷர் என்ற 4 வயது குழந்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் தேசிய விருது பெற்றார். அவர் வயதுக்கு ஏற்ற சேலை அணிந்து வந்து விருது பெற்றார். ஒட்டுமொத்த அரங்கமே அவரை பார்த்து வியந்தது. இந்நிலையில் இந்த குட்டி தேவதைக்கு நடிகரும், எம்பி.,யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல் வெளியிட்ட பதிவில், ‛‛என்னுடைய 6 வயதில் முதல் தேசிய விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்த திரிஷா தோஷருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். தொடர்ந்து உங்கள் திறமையை வளர்க்க பாடுபடுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கும் என் பாராட்டுகள்'' என குறிப்பிட்டுள்ளார்.