தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

71வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் இருதினங்களுக்கு முன் வழங்கப்பட்டன. ஜிவி பிரகாஷ், எம்எஸ் பாஸ்கர், ஊர்வசி, ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல மாநில திரைக்கலைஞர்கள் ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்றனர். மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
‛நாள் 2' என்ற மராட்டிய படத்திற்காக திரிஷா தோஷர் என்ற 4 வயது குழந்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் தேசிய விருது பெற்றார். அவர் வயதுக்கு ஏற்ற சேலை அணிந்து வந்து விருது பெற்றார். ஒட்டுமொத்த அரங்கமே அவரை பார்த்து வியந்தது. இந்நிலையில் இந்த குட்டி தேவதைக்கு நடிகரும், எம்பி.,யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல் வெளியிட்ட பதிவில், ‛‛என்னுடைய 6 வயதில் முதல் தேசிய விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்த திரிஷா தோஷருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். தொடர்ந்து உங்கள் திறமையை வளர்க்க பாடுபடுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கும் என் பாராட்டுகள்'' என குறிப்பிட்டுள்ளார்.