அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் ஆரம்பமாகி பின் கென்யாவிலும் நடக்கிறது.
இப்படத்தின் தலைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். கடந்த சில நாட்களாக இப்படத்தின் தலைப்பு குறித்து டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. படத்திற்கு 'வாரணாசி' என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான ஆன்மிக நகரம் வாரணாசி. அந்நகரை காசி என்றும் அழைக்கிறார்கள். உலக அளவில் பிரபலமான காசி விஸ்வநாதர் கோயில் அங்கு அமைந்துள்ளது. விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவன் என்றும் அர்த்தம்.
ராஜமவுலி - மகேஷ்பாபு படம் குறித்து இதற்கு முன்பு வெளியான ஒரு அப்டேட்டில் நந்தி, திரிசூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்ட ஒரு மணியை கழுத்தில் அணிந்த முகத்தைக் காட்டாத ஒருவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். அது நாயகன் மகேஷ்பாபுவின் புகைப்படமாகத்தான் இருக்கும் என்பது அனைவராலும் யூகிக்க முடிந்த ஒன்று.
படத்தில் ஆன்மிகத் தொடர்பு நிச்சயம் இருக்கும் என்பதை அது உறுதிப்படுத்தியது. 'வாரணாசி' என்ற பெயரும் படத்தை உலக அளவில் கொண்டு போய் சேர்க்கும் என்பதால் தேர்வு செய்துள்ளதாக ஒரு தகவல். இப்படி வெளியாகி உள்ள தகவல் உண்மைதானா என்பது ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.