பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் ஆரம்பமாகி பின் கென்யாவிலும் நடக்கிறது.
இப்படத்தின் தலைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். கடந்த சில நாட்களாக இப்படத்தின் தலைப்பு குறித்து டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. படத்திற்கு 'வாரணாசி' என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான ஆன்மிக நகரம் வாரணாசி. அந்நகரை காசி என்றும் அழைக்கிறார்கள். உலக அளவில் பிரபலமான காசி விஸ்வநாதர் கோயில் அங்கு அமைந்துள்ளது. விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவன் என்றும் அர்த்தம்.
ராஜமவுலி - மகேஷ்பாபு படம் குறித்து இதற்கு முன்பு வெளியான ஒரு அப்டேட்டில் நந்தி, திரிசூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்ட ஒரு மணியை கழுத்தில் அணிந்த முகத்தைக் காட்டாத ஒருவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். அது நாயகன் மகேஷ்பாபுவின் புகைப்படமாகத்தான் இருக்கும் என்பது அனைவராலும் யூகிக்க முடிந்த ஒன்று.
படத்தில் ஆன்மிகத் தொடர்பு நிச்சயம் இருக்கும் என்பதை அது உறுதிப்படுத்தியது. 'வாரணாசி' என்ற பெயரும் படத்தை உலக அளவில் கொண்டு போய் சேர்க்கும் என்பதால் தேர்வு செய்துள்ளதாக ஒரு தகவல். இப்படி வெளியாகி உள்ள தகவல் உண்மைதானா என்பது ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.