தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ் | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' |

கடந்த 2022ல் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான 'காந்தாரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கிட்டத்தட்ட 400 கோடி வசூலித்தது. தென்னிந்திய மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதன் முன்கதையை 'காந்தாரா சாப்டர் 1' என்கிற பெயரில் இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. சமீப காலமாக முன்னணி வரிசைக்கு உயர்ந்து வரும் நாயகி ருக்மிணி வசந்த் இந்த படத்தில் 'கனகாவதி' என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
'ஏஸ்', சமீபத்தில் வெளியான 'மதராஸி' ஆகிய படங்களை தொடர்ந்து ருக்மிணி வசந்தின் அடுத்த படமாக இது வெளியாகிறது. வரும் அக்டோபர் 2ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த படத்தில் நாயகி ருக்மிணி வசந்த் தற்போது தன்னுடைய காட்சிகளுக்காக டப்பிங் பேசி நிறைவு செய்துள்ளார். இது குறித்த டப்பிங் வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ருக்மிணி வசந்த்.