Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இயக்குனர் ரஞ்சித் மீது நடிகர் பாலியல் புகார் ; போலீஸ் வழக்கு பதிவு

31 ஆக, 2024 - 02:55 IST
எழுத்தின் அளவு:
Actor-sexual-complaint-against-director-Ranjith;-Police-case-register

மலையாள திரையுலகில் சமீபத்தில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது நடிகைகள் சிலர் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதில் பிரபல இயக்குனர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா முதல் குற்றச்சாட்டை கூறி அதிர வைத்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் தான் பொறுப்பு வைத்து வந்த கேரள திரைப்பட அகாடமி சேர்மன் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் அதிர்ச்சிகரமாக நடிகர் ஒருவர் இயக்குனர் ரஞ்சித் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று கூறி கேரளா டிஜிபி இடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரில் அந்த நடிகர் கூறியுள்ளதாவது : “இயக்குனர் ரஞ்சித் என்னை ஆடிசன் செய்ய வேண்டும் என்பதற்காக தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரச் சொன்னார். ஆடிசன் என்கிற பெயரில் எனது ஆடைகளை களையச் செய்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இதை நான் ஆடிசனின் ஒரு பகுதி என்றுதான் நான் நம்பினேன். அந்த சமயத்தில் நடிகை ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்ட அவர் அதன் பிறகு அந்த புகைப்படங்களை அந்த நடிகைக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு தான் அந்த நடிகை ரேவதி என்றும், தான் அனுப்பி வைத்த என்னுடைய புகைப்படங்களை அவரும் ரசித்தார் என்றும் என்னிடம் கூறினார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். மறுநாள் காலை இதற்காக எனக்கு கணிசமான தொகையும் கொடுத்தார் ரஞ்சித். இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் நான் இருந்தேன். தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து ரஞ்சித்தின் மீது காவல்துறையில் புகார் அளிக்க முன்வந்தேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விபத்திலிருந்து மீண்டு ஒரு மாதத்திற்கு பின் படப்பிடிப்பிற்கு திரும்பும் பிரேமலு நடிகர்விபத்திலிருந்து மீண்டு ஒரு ... பொய் புகார்களால் ஏற்படும் வலி; ஜெயசூர்யா வேதனை பொய் புகார்களால் ஏற்படும் வலி; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in