டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
அமரன் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23-வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் புறநானூறு என்ற இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கப் போகிறார். இந்த நேரத்தில் சுதா இயக்கத்தில் அவர் நடிக்கும் புறநானூறு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் இதேபடத்தில் வில்லனாக நடிக்க விஷாலிடத்திலும் பேச்சுவார்த்தை நடப்பதாக இன்னொரு தகவலும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அது குறித்து விஷாலிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. அவர் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார் விஷால்.