Advertisement

சிறப்புச்செய்திகள்

‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

04 டிச, 2025 - 03:32 IST
எழுத்தின் அளவு:
Problem-with-the-release-of-Va-Vaathiyar-Court-imposes-interim-stay
Advertisement

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛வா வாத்தியார்'. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படம் துவங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. பலகட்ட தாமத்திற்கு பின் படம் ரிலீஸிற்கு தயாராகி வந்தது. இடையில் ஓரிரு முறை ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தான் படம் டிச., 12ல் ரிலீஸ் என அறிவித்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை, ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தங்களிடம் ரூ.10.35 கோடி கடன் பெற்றிருந்தது. அதை வட்டி உடன் செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று(டிச., 4) வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

கோர்ட்டின் இந்த உத்தரவால் ‛வா வாத்தியார்' படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனாதிருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in