ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் மேகநாதன். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 60. இவரது தந்தை பாலன் கே நாயர் மலையாள திரை உலகின் சீனியர் நடிகராக இருந்தவர். மேகநாதன் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சென்னை மற்றும் கோவையில் தான் முடித்தார். ஆனாலும் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடிகராக நுழைந்தார். 1983ல் மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த அஸ்திரம் என்கிற படத்தில் தான் இவர் அறிமுகமானார்.
அதன் பிறகு வில்லன் கதாபாத்திரங்கள் இவரை நிறைய தேடி வந்தன. சமீப வருடங்களாக துணை வில்லன், கெட்ட போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்கள் என்றால் கூப்பிடு மேகநாதனை என்று சொல்லும் அளவிற்கு அந்த கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார். ஆக்ஷன் ஹீரோ பைஜூ, பிக்கெட் 43, சண்டே ஹாலிடே, நேரறியான் சிபிஐ, வெள்ளித்திரை உள்ளிட்ட பல படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிட்டு சொல்லும்படியானவை. கடைசியாக கடந்த 2022ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான கூமன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.