என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் மேகநாதன். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 60. இவரது தந்தை பாலன் கே நாயர் மலையாள திரை உலகின் சீனியர் நடிகராக இருந்தவர். மேகநாதன் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சென்னை மற்றும் கோவையில் தான் முடித்தார். ஆனாலும் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடிகராக நுழைந்தார். 1983ல் மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த அஸ்திரம் என்கிற படத்தில் தான் இவர் அறிமுகமானார்.
அதன் பிறகு வில்லன் கதாபாத்திரங்கள் இவரை நிறைய தேடி வந்தன. சமீப வருடங்களாக துணை வில்லன், கெட்ட போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்கள் என்றால் கூப்பிடு மேகநாதனை என்று சொல்லும் அளவிற்கு அந்த கதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார். ஆக்ஷன் ஹீரோ பைஜூ, பிக்கெட் 43, சண்டே ஹாலிடே, நேரறியான் சிபிஐ, வெள்ளித்திரை உள்ளிட்ட பல படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிட்டு சொல்லும்படியானவை. கடைசியாக கடந்த 2022ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான கூமன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.