நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் சித்தி மகனும், ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவுமான நடிகர் விக்ராந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஜேசன் சஞ்சய் இயக்குனராகி இருப்பதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, அவர் வெளிநாட்டில் படித்து வரும்போதே அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல நிறுவனங்களும், இயக்குனர்களும் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க விரும்பவில்லை . இயக்குனராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக தனது தந்தை பெரிய ஸ்டார் நடிகராக இருந்தபோதும் அவர் பெயரை பயன்படுத்தி தான் சினிமாவில் வளர வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. தனது தனித் திறமையால் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அவரது இந்த எண்ணமும் முயற்சியுமே அவருக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் விக்ராந்த்.