'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் சித்தி மகனும், ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவுமான நடிகர் விக்ராந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஜேசன் சஞ்சய் இயக்குனராகி இருப்பதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, அவர் வெளிநாட்டில் படித்து வரும்போதே அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல நிறுவனங்களும், இயக்குனர்களும் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க விரும்பவில்லை . இயக்குனராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக தனது தந்தை பெரிய ஸ்டார் நடிகராக இருந்தபோதும் அவர் பெயரை பயன்படுத்தி தான் சினிமாவில் வளர வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. தனது தனித் திறமையால் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அவரது இந்த எண்ணமும் முயற்சியுமே அவருக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் விக்ராந்த்.




