ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் வெளியான பதான், ஜவான் படங்கள் தொடர்ச்சியாக ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதித்தன. ஆரம்பகாலத்தில் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளார் ஷாரூக். இந்நிலையில் துபாய் நடந்த நிகழ்ச்சியில் தனது தோல்விகள் பற்றி அவர் பேசியதாவது : ‛‛தோல்விகளுக்காக ஒரு நாளும் அழக்கூடாது. அதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். எனக்கு ஏற்பட்ட தோல்விகளை நினைக்கையில் வெறுப்பாக உள்ளது. நான் பாத்ரூமில் அழுதிருக்கிறேன். அதை யாரிடமும் வெளிகாட்டியதில்லை.
இந்த உலகம் உங்களுக்கு எதிராக இல்லை என நம்ப வேண்டும். விரக்தி இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மட்டுமே தவறு நடக்கிறது என நம்பக்கூடாது. வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கும். அது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். அதற்காக வாழ்க்கையை குறை கூற கூடாது'' என்றார்.