அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்ட் வலம் வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டில் தான் அதிகம் நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை குறைத்துவிட்டார். சமீபகாலமாக நடிகைகளின் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் உருவாக்கி மோசடி சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதிதி ராவ், ஸ்ரேயா போன்ற நடிகைகள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தனர். இப்போது ரகுலுக்கும் இதேபோன்று நடந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛வணக்கம் நண்பர்களே... யாரோ ஒருவர் என்னைப் போல வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்து மக்களுடன் அரட்டை அடிப்பது எனக்குத் தெரிய வந்துள்ளது. இது என்னுடைய எண் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும், எந்த விதமான உரையாடல்களிலும் ஈடுபட வேண்டாம். தயவுசெய்து அதை பிளாக் செய்யவும்'' என குறிப்பிட்டு அந்த போலி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.