நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜோஷி இயக்கத்தில், நடிகர் திலீப் தயாரிப்பில், கடந்த 2008 நவம்பர் 5ம் தேதியன்று வெளிவந்த 'ட்வென்டி: 20' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது 16 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதனை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. 'எம்எம்' (மம்முட்டி, மோகன்லால்) என்று பெயர் வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இப்படத்தின் தொடக்க விழா பூஜை நேற்று நடந்தது. மோகன்லால் குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இந்த படத்தில் நயன்தாரா, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹூசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், இயக்குனர் பிரகாஷ் பெலவாடி உள்பட பலர் நடிக்கின்றனர். ஆண்டோ ஜோசப், சி.ஆர்.சலீம், சுபாஷ் ஜார்ஜ் மானுவல் இணைந்து தயாரிக்கின்றனர். மகேஷ் நாராயணன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கொச்சி, இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஐதராபாத், டில்லி ஆகிய பகுதிகளில் 150 நாட்களில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது.