மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. அதைத்தொடர்ந்து எதிர்பாராத பரிசாக விஜய்யுடன் கோட் படத்தில் ஜோடியாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அந்த படத்தின் மூலம் பரவலாக ரசிகர்களை சென்றடைந்த மீனாட்சி சவுத்ரிக்கு துல்கர் சல்மானுடன் ஜோடியாக நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமைந்துவிட்டது. இந்த நிலையில் பல பெரிய ஹீரோக்களின் பார்வை இவரை நோக்கி தற்போது திரும்பி உள்ளது. அந்த வகையில் தற்போது பிஸியான நடிகையாக மாறியுள்ளார் மீனாட்சி சவுத்ரி.
இந்த நிலையில் தெலுங்கு இளம் நடிகரும், நாகசைதன்யாவின் உறவினருமான சுஷாந்த் அனுமோலு என்பவருடன் மீனாட்சி சவுத்ரி காதலில் விழுந்துள்ளதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் ஒரு தகவல் சமீப நாட்களாக சோசியல் மீடியாவின் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2021ல் வெளியான இச்சாட்ட வாகனமுலு நிலபரடு என்கிற படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தது தான்.
இந்த நிலையில் நாளை (நவ-22) தெலுங்கில் தான் ஹீரோயினாக நடித்து வெளியாக இருக்கும் மெக்கானிக் ராக்கி என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார் மீனாட்சி சவுத்ரி. அப்போது பேசிய அவர் இந்த காதல் கிசுகிசு குறித்து விளக்கம் அளிக்கும் விதமாகவும் பேசினார்.
அவர் பேசும்போது, “எப்படித்தான் இது போன்ற செய்திகள் பரவுகிறது என்றே தெரியவில்லை. ஒருமுறை நான் சலார் படத்தில் நடிப்பதாக சொன்னார்கள். இன்னொரு நாள் நான் விஸ்வம்பரா படத்தில் நடிப்பதாக சொன்னார்கள். அந்த வகையில் இதுவும் ஒரு வதந்தி தான். நான் இப்போதைக்கு திருமணம் செய்ய போவதில்லை. நான் இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறேன். ஆனால் யாருடனும் மிங்கிளாக தயாராக இல்லை” என்று ரைமிங்காக பேசி இந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.