பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பொதுவாக ஸ்டார் ஹீரோக்களின் வாரிசுகள் ஹீரோக்களாக அறிமுகமாகும்போது இது வழக்கம்தானே என பெரிய அதிர்வுகள் ஏற்படாது. அதே சமயம் அவர்கள் இயக்குனர்களாக மாறும்போது ஆச்சரியமாக அனைவரது கவனமும் அந்த பக்கம் திரும்பும். அப்படி நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தாத்தாவை போல இயக்குனர் பாதையில் அடிஎடுத்து வைத்து படம் இயக்கி வருகிறார். ஆனால் இதுநாள் வரை அவரது தந்தையான விஜய் தனது மகன் பற்றியோ அவர் டைரக்ஷனில் நுழைந்தது பற்றியோ ஒரு வார்த்தை கூட வெளிப்படையாக பேசியதில்லை. இருவரும் இணைந்து எடுத்த ஒரு போட்டோ வெளியாகி கூட பல வருடங்கள் ஆகிவிட்டது.
அதே சமயம் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானின் மகனும் தந்தையை போல நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் டைரக்ஷன் பக்கம் பார்வையை திருப்பி உள்ளார். அந்த வகையில் தற்போது 'தி பே***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கானும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தனது மகன் பற்றியும் அவரது டைரக்சன் பற்றியும் பெருமையாக வெளியே பேசி வருகிறார்.
ஆர்யன் கான் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது போல தான் தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் உரையாடும்போது ஆர்யன் கான் இயக்கி வரும் படம் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷாருக்கான், “படம் சூப்பராக இருக்கிறது. நீங்கள் பார்த்துவிட்டு தீர்மானியுங்கள். ஆனால் பொழுதுபோக்காகவும் உணர்ச்சி பூர்வமாகவும் உருவாகி இருக்கிறது. இது என்னுடைய நேர்மையான விமர்சனம்” என்று கூறியுள்ளார்.