காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

'சக்திமான்', 'தியா அவுர் பாதி ஹம்' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் நூபுர் அலங்கார். பல பாலிவுட் திரைப்படங்களில் வில்லி மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் இவர் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பிஎம்சி வங்கி மோசடியில் பணம் முழுவதையும் இழந்தார்.
பிறகு ஆதரவாக இருந்த தாய், சகோதரி இறந்த விட்டதால் அவருக்கு வாழ்க்கை மீது அதீத வெறுப்பு ஏற்பட்டது. இதனால் தனது நடிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை துறந்து சாமியாராகிவிட்டார்.
தற்போது 'பீதாம்பரா மா' என்ற ஆன்மிக பெயருடன் இமயமலையில் வசித்து வருகிறார். அங்கு மிகவும் குறைந்த உடைகளுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். பிச்சை எடுத்து சாப்பிட்டு குகைகளிலும், தொலைதூர கிராம பகுதிகளிலும் வசித்து வருகிறார்.
"உலக வாழ்க்கையின் அழுத்தங்கள், செலவினங்கள் போன்ற கவலைகளின்றி நான் மிகவும் நிம்மதியாக வாழ்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.