திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

கன்னட திரையுலகில் நடிகர் ராஜ்குமாருக்கு அடுத்ததாக மரியாதைக்குரிய நபராக ரசிகர்களால் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்தவர்களாலும் போற்றப்படுபவர் நடிகர் விஷ்ணுவர்தன். தனது 37 வருட சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த விஷ்ணுவர்தன் கடந்த 2009 ஆம் வருடம் காலமானார். அவர் நினைவாக பெங்களூருவில் உள்ள அபிமன் ஸ்டுடியோவில் அவருக்கு ஒரு நினைவிடம் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வேறுசில கட்டடங்களின் கட்டுமான காரணங்களுக்காக ஒரே இரவில் அந்த நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளது.
இது விஷ்ணுவர்தன் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரிடமும் கூட அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகர் கிச்சா சுதீப் கூறும்போது, “விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிக்கப்பட்டது இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. நான் கிச்சாவாக பேசவில்லை. அவரது ஒரு ரசிகனாக மிகப்பெரிய அளவில் புண்பட்டு இருக்கிறேன். அதேசமயம் விஷ்ணுவர்தன் எப்போதுமே சொல்வதுண்டு, “இறந்தாலும் நான் ஏதோ ஒரு கட்டடத்துக்குள் அடைந்து கிடக்க விரும்ப மாட்டேன். இல்லையென்றால் ஒரு அசையாத பொருளாக இருக்க மாட்டேன். வேறு ஐந்து விதமான வடிவங்களாக நான் உணரப்படுவேன். நாம் இயற்கையை சேர்ந்தவர்கள் என்று அவ்வப்போது கூறுவார்.
ஒரு வகையில் அவரது அந்த விருப்பம் இப்போது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட சாதாரண ரசிகர்களும் மக்களும் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு கடிதம் அனுப்புவதற்கு தபால் பெட்டி எப்படி தேவையோ அதே போலத்தான் நம் பிரார்த்தனைகளை மரியாதையை செலுத்துவதற்கு ஒரு நினைவிடம் தேவை” என்று கூறியுள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டியும், “விஷ்ணுவர்தன் நினைவிடம் இடிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. அவரது பெர்சனாலிட்டியையும் கலைக்கு அவர் செய்த பணிகளையும் அவமானப்படுத்துவது போல இருக்கிறது” என்று கூறியுள்ளார்.




