ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
கடந்த 15 வருடங்களுக்கு மேல் அஜித் நடித்த படங்களை எடுத்துப் பார்த்தால் அவருக்கென ஒரு ஆஸ்தான இயக்குனர்கள் வட்டாரத்தை அவர் உருவாக்கி வைத்திருப்பதை கவனிக்க முடியும். அப்படி ஆரம்பத்தில் இயக்குனர் விஷ்ணுவர்தன், அதன் பிறகு சிவா, லேட்டஸ்ட்டாக எச். வினோத் இவர்களுடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கூட்டணி சேர்ந்து நடித்து வந்தார். அந்த வகையில் தற்போது ‛விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய படங்களை முடித்து விட்ட அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
சிலர் ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் மீண்டும் அவருடன் இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை வைத்து ‛நேசிப்பாயா' என்கிற படத்தை இயக்கியுள்ளார் விஷ்ணுவர்தன். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவரிடம் அஜித்தின் படத்தை இயக்குவீர்களா, ‛பில்லா 3'க்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஷ்ணுவர்தன், ‛‛பில்லா 3 திரைப்படத்திற்கு வாய்ப்பே இல்லை. அதே சமயம் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதற்கான பேச்சு நடைபெற்று வருகிறது. அதில் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார்,'' என்று புதிய அப்டேட் தகவலை கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
அஜித்தை வைத்து ‛பில்லா, ஆரம்பம்' படங்களை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.