'சக்தித் திருமகன்' கதைத் திருட்டு சர்ச்சை : இயக்குனர் விளக்கம் | 8 மணி நேரம்தான் நடிப்பேன் : ராஷ்மிகா சொல்வது சரியா, சாத்தியமா? | 'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் |

கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் அஜித்குமார், துபாயில் நடந்து வரும் '24எச்' ரேஸில் அஜித் தலைமையிலான ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றுள்ளது. இதற்கிடையே நேற்று (ஜன.,11) திடீரென ரேஸில் இருந்து அஜித் விலகுவதாக அறிவிக்கபட்டது. இதுதொடர்பாக அஜித் குமாரின் ரேஸிங் அணி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து, உடல் நலன் மற்றும் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு துபாய் 24H கார் ரேஸில் இருந்து அஜித் விலகுகிறார். எனினும் அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார். கடினமான மற்றும் தன்னலமற்ற இந்த முடிவை அஜித்தே எடுத்துள்ளார். அஜித் அணி தொடர்ந்து ரேஸில் போட்டியிடும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
அஜித்குமார் இந்த நிகழ்வில் இரண்டு ரோல்களை மேற்கொள்ளவுள்ளார். போர்ஷ்சே 992 கப் கார் (எண் 901) பந்தயத்தில் அணி உரிமையாளராகவும், போர்ஷ்சே கேமேன் ஜிடி4 பந்தயத்தில் ஓட்டுநராகவும் பங்கேற்கவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (ஜன.,12) நடைபெற்ற போட்டியில் அஜித்குமாரின் அணி போர்ஷ்சே 991 கப் கார் (எண் 901) ரேஸில் 3வது இடம் பிடித்து அசத்தியது. ஒட்டுமொத்த தொடரில் 23வது இடம் பிடித்திருந்தது. மேலும் ஜிடி4 பிரிவில் ‛ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்' (Spirit of the race) எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிப்பெற்றதும் இந்திய தேசியக்கொடியுடன் ரசிகர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அஜித். அத்துடன், வெற்றிப்பெற்ற அணிகளை கவுரப்படுத்தும்போதும் நமது தேசியக்கொடியுடன் மேடையேறினார்.
அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்திருந்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.