'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை | 30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் | திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால் | குழப்பத்தில் தமிழ்ப் படங்களின் வெளியீடுகள் : கோபத்தில் தியேட்டர்காரர்கள் | ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்களில் பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன் | அகண்டா 2 : சமூக வலைத்தளங்களில் பரவும் 'டிரோல்கள்' |

பாடகர், நடிகரான பூவையார் 'ராம் அப்துல்லா ஆண்டனி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். நாளை படம் ரிலீஸ். ஜெயவேல் இயக்கி இருக்கிறார். 3 மதத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் இருந்து ஒரு சிறுவனை ஏன் கொலை செய்கிறார்கள். அவர்கள் போலீஸ் பிடியில் சிக்கினார்களா என்பது கதை.
இந்த படம் குறித்து பேசியுள்ள பூவையார், ''நான் கதை நாயனாக நடித்த படம் பல தடைகளை தாண்டி வருவது மகிழ்ச்சி. இதில் பள்ளி மாணவனாக நடித்து இருந்தாலும், கதை ஒரு முக்கியமான கருத்தை பேசுகிறது. அதாவது, புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பீடி, சிகரெட் கூடவே கூடாது. அதனால், பாதிப்பு அதிகம் என்ற நல்ல விஷயத்தை சொல்கிறது. தனிப்பட்ட முறையிலும் இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன்.
நான் நடிக்கும் எந்த படத்திலும் தம் அடிக்கிற காட்சியில் நடிக்க மாட்டேன். காரணம், என் தந்தை இந்த பழக்கத்தால்தான் உயிர் இழந்தார். அதன் பாதிப்பு, வலி, வேதனை எனக்கு நன்கு தெரியும். ஆகவே, அப்படி நடிக்க மாட்டேன். மற்ற பெரிய நடிகர்கள் தம் அடிக்கிற காட்சியில் நடிப்பது குறித்து கருத்து சொல்ல முடியாது. நான் அந்தளவு வளரவில்லை. அடுத்தும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். மார்ஷல் படத்தில் கார்த்தி உடன் இணைந்து நடிக்கிறேன். விஜய் அண்ணா நேரம் கொடுத்தால், நான் நடித்த இந்த படத்தை போட்டுக் காண்பிப்போம்'' என்றார்.