கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வந்த படம் 'சிறை'. இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி என்பவர் இயக்கி உள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இந்த சிறை படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், 'சிறை படத்தை பார்த்தேன். மனதுக்கு நிறைவாக உள்ளது. இந்த மாதிரியான கதைகளை எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியல், எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவுக்கு மாற்ற வேண்டும் என்பதை உணர்ந்த படைப்பாளியின் வருகை அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு நம்பிக்கையும் துணிச்சலையும் கொடுக்கும். அந்த அளவுக்கு இந்த படம் ஒரு அசாத்தியமான படைப்பாக உள்ளது.
முதல் படத்திலேயே ஒரு பாய்ச்சலை நிகழ்த்திருக்கும் இயக்குனர் மற்றும் இதுபோன்ற கதைகள்தான் எனக்கு வேண்டும் என்று களம் இறங்கி இருக்கும் விக்ரம் பிரபுவுக்கும், தயாரிப்பாளருக்கும், சிறந்த இசையை கொடுத்திருக்கும் ஜஸ்டின் பிரபாகருக்கும் வாழ்த்துக்கள், நன்றி' என பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், சிறை படத்துக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்ப வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.




