பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. சமீபகாலமாக விக்ரம் பிரபு கதைக்கு முக்கியத்துவம் தந்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான 'சிறை' படத்தை உதாரணமாக கூறலாம். விக்ரம் பிரபு அளித்த ஒரு பேட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்து வெளியான இறுகப்பற்று படத்தின் மூலம் நடந்த சில சம்பவங்களை குறித்து கூறியதாவது, "இறுகப்பற்று படம் திரைக்கு வந்த இரண்டாவது வாரத்தில் திருச்சி நீதிமன்றத்தில் 38 விவாகரத்து வழக்கைத் திரும்ப பெற்றுள்ளார்கள். இந்த படத்தினால் ஒரு 1000 திருமணம் காப்பாற்றப்படும் என நினைத்தோம். ஒரு படத்தின் தாக்கம் நாங்கள் சொல்லாமல் நடந்த போது எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது" என மனம் நெகிழ்ந்து பகிர்ந்துள்ளார் விக்ரம் பிரபு.