ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

மலையாளத்தில் திரையுலகில் கடந்த 2008ல் '20-20' என்கிற படம் வெளியானது. மலையாள நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக உருவான இந்த படத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். அதேசமயம் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை நடிகர் திலீப் ஏற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள 'ப ப ப' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார் திலீப்.
அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, “20-20 படத்தில் ஒரு பாடலில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் அந்த சமயத்தில் அவர் கொஞ்சம் பிஸியாக இருந்தார். அதன்பிறகு அவர் ஒருநாள் என்னை அழைத்து இப்போதும் அந்த பாடல் எடுக்கப்பட வேண்டி இருக்கிறதா என்று கேட்டார். ஆனால் அவர் கேட்ட சமயத்தில் நாங்கள் கிட்டத்தட்ட முழு படத்தையும் முடித்து ரிலீசுக்கு தயாராகி விட்டோம். அதனால் 20-20 படத்தில் அவரால் இடம்பெற முடியாமல் போய்விட்டது. அதில் எங்களுக்கு வருத்தமே” என்று கூறியுள்ளார்.