‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

2017ல் கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளான சம்பவத்தில் நடிகர் திலீப்பும் ஒரு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். சமீபத்தில் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் திலீப் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் துவக்க காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமினில் வெளிவந்து படங்களில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தனது படங்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வெளிநாடு சென்று வந்தார். திரும்பி வந்த பிறகு மீண்டும் தனது பாஸ்போர்ட்டை போலீஸாரிடம் ஒப்படைத்து இருந்தார்.. தற்போது அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீஸார் திலீப்பின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கு அரசு வழக்கறிஞர் தரப்பில், இந்த வழக்கு மீண்டும் அப்பீலுக்கு செல்ல இருக்கிறது என்பதால் அவரது பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நீதிமன்றமோ, தற்போதைய வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.. அதனால் அவர் பாஸ்போர்ட்டை அவரிடம் வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து திலீப் வசம் அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டுள்ளது.