காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

மலையாளத்தில் சில நாட்களுக்கு முன்பு மம்முட்டி நடித்த களம் காவல் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பல அபலை பெண்களை ஆசை வார்த்தை காட்டி அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட பிறகு கொலை செய்யும் ஒரு சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் மம்முட்டி மிக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமல்ல, இதுநாள் வரை வில்லனாக பார்த்து வந்த நடிகர் விநாயகன் இந்த படத்தில் இந்த கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லன், ஹீரோ இருவருமே தங்களது கதாபாத்திரங்களை மாற்றி மாற்றி நடித்துள்ளதால் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பாக இங்கே தமிழ் திரை உலகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலரும் களம் காவல் படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் துருவ் விக்ரம் களம் காவல் படம் பார்த்துவிட்டு, “மொத்த படத்தையும் நடிகர் மம்முட்டி தனது தோள்களில் தாங்கியுள்ளார். பல கதாநாயகர்கள் இப்படி ஒரு கதாபாத்திரத்தை செய்வதற்கு நிச்சயமாக தயங்குவார்கள். ஆனால் இது போன்ற ஒரு ரிஸ்க்கான கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு துணிச்சலாக நடித்திருப்பதால் தான் அவர் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்” என்று பாராட்டியுள்ளார்.