விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கேஜிஎப் படத்தில் இரண்டு பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் யஷ் நடித்து வரும் படம் 'டாக்ஸிக்'. நடிகையும் தேசிய விருது பெற்ற இயக்குனருமான கீத்து மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சில பிரச்னைகளால் தொடர்ந்து தாமதமாக நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 14ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீப காலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல காட்சிகள் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.
இதன் பின்னணியில் இயக்குனர் கீது மோகன்தாஸுக்கும் நடிகர் யஷ்ஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீதி இருக்கும் படத்தை நடிகர் யஷ்ஷே இயக்க தீர்மானித்திருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் கன்னட திரை உலகில் பேசப்பட்டு வருகிறது. இங்கே தமிழில் கூட நடிகர் விஷால், தான் நடித்து வந்த 'மகுடம்' திரைப்படத்தின் இயக்குனர ரவி அரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது மீதி திரைப்படத்தை தானே இயக்கி வருகிறார். அதே பாணியில் இயக்குனர் யஷ் கையில் எடுப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.