சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் வெகு சிலர் தங்களிடம் உள்ள குறைபாட்டை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்தி பல சமயங்களில் ஒப்புக்கொள்வதை பார்த்துள்ளோம். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கான் சமீபத்தில் ஜெட்டாவில் நடைபெற்ற செங்கடல் திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்டபோது நான் ஒன்றும் மிகச்சிறந்த நடிகர் இல்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து அந்த நிகழ்வில் சல்மான்கான் பேசும்போது, அவரிடம் அவரது நடிப்பு ஸ்டைல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்த தலைமுறையில் நடிப்பு என்பது எப்போதோ ஒதுங்கி விட்டது. என்னை எப்போதுமே சிறந்த நடிகர் என்று நான் நினைத்துக் கொண்டதில்லை. நீங்கள் என்னிடம் இருந்து எதையும் செய்யச் சொல்லி பெற்று விட முடியும். ஆனால் என்னை நடிக்க வைப்பது உங்களால் முடியாது. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறேன். சில நேரங்களில் நான் ஒரு காட்சியில் அழுதால் நீங்கள் எல்லோரும் அதைப் பார்த்து சிரிப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.