வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் வெகு சிலர் தங்களிடம் உள்ள குறைபாட்டை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்தி பல சமயங்களில் ஒப்புக்கொள்வதை பார்த்துள்ளோம். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கான் சமீபத்தில் ஜெட்டாவில் நடைபெற்ற செங்கடல் திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்டபோது நான் ஒன்றும் மிகச்சிறந்த நடிகர் இல்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து அந்த நிகழ்வில் சல்மான்கான் பேசும்போது, அவரிடம் அவரது நடிப்பு ஸ்டைல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்த தலைமுறையில் நடிப்பு என்பது எப்போதோ ஒதுங்கி விட்டது. என்னை எப்போதுமே சிறந்த நடிகர் என்று நான் நினைத்துக் கொண்டதில்லை. நீங்கள் என்னிடம் இருந்து எதையும் செய்யச் சொல்லி பெற்று விட முடியும். ஆனால் என்னை நடிக்க வைப்பது உங்களால் முடியாது. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறேன். சில நேரங்களில் நான் ஒரு காட்சியில் அழுதால் நீங்கள் எல்லோரும் அதைப் பார்த்து சிரிப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.




