பிளஷ்பேக் : 2 வண்ண தொழில்நுட்பத்தில் தயாரான அதிசயப்பெண் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | 'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா |

ஹாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது 'பேட்டில் ஆப் கல்வான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அபூர்வ லக்கியா என்பவர் இயக்கி வருகின்ற இந்த படத்தின் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து இவர்களுக்கிடையே கடந்த மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இவர்கள் சொன்ன கதை சல்மான் கானுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். அதாவது சினிமாவில் சூப்பர் ஹீரோவாக இருக்கும் ஒருவர் அது போரடித்து போய் அதை விட்டு ஒதுங்கி ஓய்வு பெற நினைக்கிறார். ஆனால் காலம் அவரை மீண்டும் அதே கதாபாத்திரங்களை செய்யும்படி இழுத்து வருகிறதாம். காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.