ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

பாலிவுட்டில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்த துரந்தர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஸ்பை திரில்லர் படமாக வெளியான இந்த படம் பத்தே நாட்களில் 550 கோடிக்கு மேல் வசூலித்து இந்த வருட இறுதியில் பாலிவுட் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இந்த படத்தை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “உண்மையிலேயே துரந்தர் போல ஒரு திரைப்படத்தை உருவாக்குவது பயங்கரமான ஒன்றுதான். அது மட்டுமல்ல இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்காக மூன்று மாதங்கள் நம்மை காத்திருக்க சொல்கிறார்கள். எங்கள் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். முன்கூட்டியே இதன் ரிலீஸ் செய்தியை அறிவியுங்கள்” என்று கூறியுள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் வெளியாகும் என்பது உறுதியாகிறது.




