ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜீத்து ஜோசப் தனது 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் தனக்கு என ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதற்கேற்றபடி தற்போது 'திரிஷ்யம்-3' படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார். அக்டோபரில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
அதே சமயம் இதற்கு முன்னதாக அவர் சிறிய பட்ஜெட்டில் பிரபல மலையாள நடிகர்களாக பிஜுமேனன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் இருவரையும் கதையின் நாயகர்களாக வைத்து 'வலது வசத்தே கள்ளன்' என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார். இந்த படம் வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாக இருக்கிறது. நீதிமன்றம் அதன் தீர்ப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் இவற்றின் பின்னணியில், ஜீத்து ஜோசப்பின் பாணியில் வழக்கமான சில டுவிஸ்ட்டுகள் கலந்து இந்த கதை உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.