எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஜீத்து ஜோசப் இயக்கினார். அதன்பிறகு அப்படத்தை தமிழிலும் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். பின்னர் திரிஷ்யம் 2-ம் பாகத்தையும் மோகன்லால், மீனா நடிப்பில் இயக்கியவர், தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தையும் மோகன்லால்- மீனாவை வைத்தே இயக்கி உள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது .
இந்த நிலையில் திரிஷ்யம் படத்தின் நான்காவது பாகமும் உருவாகிறதா? என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மூன்றாம் பாகத்திற்கு பிறகு கதையை மேலும் வளர்க்கும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. இதற்கு மேலும் இந்த கதையை இழுத்தால் சுவராஸ்யம் குறைந்து விடும். அதனால் இந்த மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் படம் முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளார்.