ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஜீத்து ஜோசப் இயக்கினார். அதன்பிறகு அப்படத்தை தமிழிலும் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். பின்னர் திரிஷ்யம் 2-ம் பாகத்தையும் மோகன்லால், மீனா நடிப்பில் இயக்கியவர், தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தையும் மோகன்லால்- மீனாவை வைத்தே இயக்கி உள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது .
இந்த நிலையில் திரிஷ்யம் படத்தின் நான்காவது பாகமும் உருவாகிறதா? என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மூன்றாம் பாகத்திற்கு பிறகு கதையை மேலும் வளர்க்கும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. இதற்கு மேலும் இந்த கதையை இழுத்தால் சுவராஸ்யம் குறைந்து விடும். அதனால் இந்த மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் படம் முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளார்.




