மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த பத்து வருடங்களில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு பாகங்களுமே தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வரவேற்பை பெற்றன. அதனால் இந்த மூன்றாம் பாகத்திற்கு தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ரசிகர்களின் ஆர்வத்தை நிறைவேற்றும் விதமாக தற்போது திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
அதேசமயம் ஹிந்தியில் இதன் ரீமேக்கில் கதாநாயகனாக நடித்த அஜய் தேவ்கன் இந்த படத்தின் வேலைகளை துவங்கி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திரிஷ்யம் 3 படத்தை வெளியிடும் உரிமையை மும்பையை சேர்ந்த பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் ஜீத்து ஜோசப்பிடம் தற்போது பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு இதன் வெளியீட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதால் ஹிந்தியிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் தான் இந்த படம் வெளியாகுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜீத்து ஜோசப், “இதனால் எந்த மாற்றமும் இல்லை. முதலில் மலையாளத்தில் தான் திரிஷ்யம் 3 வெளியாக இருக்கிறது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து தான் ஹிந்தியில் வெளியாகும்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.




