எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த பத்து வருடங்களில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு பாகங்களுமே தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வரவேற்பை பெற்றன. அதனால் இந்த மூன்றாம் பாகத்திற்கு தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ரசிகர்களின் ஆர்வத்தை நிறைவேற்றும் விதமாக தற்போது திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
அதேசமயம் ஹிந்தியில் இதன் ரீமேக்கில் கதாநாயகனாக நடித்த அஜய் தேவ்கன் இந்த படத்தின் வேலைகளை துவங்கி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திரிஷ்யம் 3 படத்தை வெளியிடும் உரிமையை மும்பையை சேர்ந்த பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் ஜீத்து ஜோசப்பிடம் தற்போது பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு இதன் வெளியீட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதால் ஹிந்தியிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் தான் இந்த படம் வெளியாகுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜீத்து ஜோசப், “இதனால் எந்த மாற்றமும் இல்லை. முதலில் மலையாளத்தில் தான் திரிஷ்யம் 3 வெளியாக இருக்கிறது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து தான் ஹிந்தியில் வெளியாகும்” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.




