'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி | ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் |

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் ‛துரந்தர்'. அவருடன் அக்சய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் 1200 கோடியை கடந்து வசூலித்து வருகிறது. இந்த நிலையில், இந்தத் ‛துரந்தர்' படத்தை பார்த்த நடிகர் சூர்யா அதுகுறித்து ஒரு பாராட்டு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இந்த துரந்தர் படத்தை தான் ஒரு தலைசிறந்த படைப்பாக கருதுவதாக அப்பட இயக்குனர் ஆதித்யா தாரை பாராட்டியுள்ளார்.
இந்த படத்தின் கதையும் காட்சி அமைப்பும் தன்னை வியக்க வைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் தனது நண்பரான நடிகர் மாதவனையும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் பாராட்டுயுள்ளார். சூர்யாவின் இந்த பாராட்டுக்கு, சூர்யாவின் வார்த்தைகள் விலைமதிப்பற்றது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் அன்புக்கு நன்றி. அவர்கள் கருணை மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் என்று பதிவிட்டுள்ளார் மாதவன்.