கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் துரந்தர். அவருடன் அக்சய் கண்ணா, சஞ்சய்தத், மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 21 நாளில் ரூ.1006.7 கோடி வசூலித்திருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 789.18 கோடியும், உலகளவில் 217.5 கோடியும் அடக்கம். இந்த துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த துரந்தர் படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் 285 கோடிக்கு வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா -2' படத்தின் ஓடிடி உரிமை 270 கோடிக்கு விற்பனையான நிலையில், தற்போது அதைவிட துரந்தர் படம் அதிக தொகைக்கு விற்பனையாகி, இந்திய அளவில் இதுவரை ஓடிடியில் விற்பனையான படங்களில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட முதல் படமாகியுள்ளது.




