வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' படம் ஜன.,9ல் ரிலீஸ் என அறிவித்து, முன்பதிவும் துவங்கப்பட்டது. ஆனால், இதுவரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. ரிலீசுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சென்சார் சான்றிதழ் தாமதமாவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது பட தயாரிப்பு நிறுவனம்.
வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, ஜனநாயகனில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சி இருப்பதாக சென்சார் வாரியம் கூறியது. இது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், படத்தை மீண்டும் ஆய்வு செய்ய புதிய கமிட்டிக்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் ஏ ஆர் சுந்தரேசன் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதற்கு, தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், ''குறுகிய நாள் தான் உள்ளது புதிய கமிட்டிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும். மூன்று மொழியில் படத்தை திரையிட வேண்டும்'' என்று கூறினார்.
இதை கேட்ட நீதிபதி, ''ஜனநாயகன் படத்தை ஏன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்க கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே'' எனக்கூறி வழக்கை நாளைக்கு (ஜன,7) ஒத்திவைத்தார்.
வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், நாளைக்கே உத்தரவு வந்தாலும், அதன்பிறகு சென்சார் அதிகாரிகள் 2 நாளில் சான்றிதழ் வழங்கவேண்டும். இப்படியான சிக்கலில், ஜன.,9ல் திட்டமிட்டபடி படம் ரிலீசாகுமா அல்லது 10ம் தேதியோ அல்லது 14ம் தேதியோ தள்ளிப்போகுமா என்பது இனிதான் தெரியவரும்.




