சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் வெளியிட்ட தகவல்! | ஷாருக்கான் நடித்து வரும் 'கிங்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | பாட்ஷா அளவிற்கு பேராசை படும் அமரன் | என் வாழ்க்கையே படங்கள்: இளம் இயக்குநர் விஜய்ராகவா | பராசக்தி, சிவகாசி, டிராகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: ஒரு இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உருவான முதல் நட்பு | 25 நாட்கள் பிரம்மாண்டமாக படமாக்கப்படும் கோபிசந்த் பட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி | பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் |

கர்நாடக அரசு ஆண்டு தோறும் கலை, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கி வருகிறது. 2025ம் ஆண்டுக்கான கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலை உலகைச் சேர்ந்த நடிகை சரோஜாதேவி, நடிகர் விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு இதனை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் "திரைத்துறையில் சாதனை புரிந்ததற்காக நடிகர் விஷ்ணுவர்தன், நடிகை சரோஜாதேவி ஆகியோருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கா்நாடக ரத்னா விருது வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது" என்றார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த விஷ்ணுவர்தன் கடந்த 2009ம் ஆண்டு காலாமானர். தமிழ் நாட்டில் 'கன்னடத்து பைங்கிளி' என அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி கடந்த ஜூலை 14ந்தேதி மரணம் அடைந்தார்.




