சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தனது வாழ்க்கை படத்தில் தானே நடிக்கிற வாய்ப்பு சிலருக்கு மட்டுமே அமையும். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் முதல் பல நடிகைகள் நடித்தார்கள். ஷகிலாவின் கதையில் சில நடிகைகள் நடித்தார்கள், சாவித்ரி கதையில் கீர்த்தி சுரேஷ் நடித்தார்.
ஆனால் சுதா சந்திரன் தன் கதையில் தானே நடித்தார். திருச்சி அருகே வயலூர்தான் சுதாவின் சொந்த ஊர். ஆனால் அவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். முறைப்படி நாட்டியம் கற்று இந்திய அளவில் புகழ்பெற்ற நடன கலைஞரான இருந்தார். சாலை விபத்து ஒன்றில் அவர் தனது ஒரு காலை இழந்தார்.
அதன்பிறகு முறையான பயிற்சியெடுத்து செயற்கை கால் பொருத்தி மீண்டும் நடனமாடினார். அவரது தன்னம்பிக்கையும, விடா முயற்சியும் உலகிற்கே எடுத்துக் காட்டானது. அவரது வாழ்க்கை 'மயூரி' என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது. பின்னர் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது.
இந்த படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கினார். சுதாவுடன் பி.எல்.நாராயணா, வீரமாச்சேனி, ஒய்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்தனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை அமைத்திருந்தார். 1985ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தில் வெளியிடப்பட்டு பெரிய வெற்றி பெற்றது.