வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

செலக்டிவான படங்களில் மட்டும் நடித்து வரும் நடிகை பார்வதி, மலையாளத்தில் தான் அறிமுகமான காலகட்டத்திலேயே நடிகர் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து விட்டார். அதேசமயம் மம்முட்டியுடன் இணைந்து அவர் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. இந்த நிலையில் தற்போது ரதீனா என்பவர் இயக்கத்தில் புழு என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார் பார்வதி.
இந்தப்படத்தின் இயக்குனர் ரதீனா இந்த கதையை கூறியதும் அதில் உருவாக்கப்பட்டிருந்த கதாநாயகி பாத்திரம் பார்வதியை ரொம்பவே கவர்ந்து விட்டதால் இதில் நான்தான் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டார். அதன்பிறகுதான் கதாநாயகனாக நடிப்பது யார் என இயக்குனரிடம் கேட்க அவர் மம்முட்டி என பதில் சொல்லியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போனார் பார்வதி.
காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கசபா என்கிற படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி நடித்து இருந்தார் என கூறியதால் மம்முட்டி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் பார்வதி. இதனால் மம்முட்டிக்கு எதிரானவராகவே அவர் சித்தரிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் தனக்கு பிடித்த கதையும் கதாபாத்திரமும் கிடைத்தாலும் அதன் கதாநாயகன் மம்முட்டி என்பதால் அதில் எப்படி நடிக்க முடியும் என தயங்கினாராம் பார்வதி.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் பார்வதியை நடிக்க சிபாரிசு செய்ததே மம்முட்டி தான் என இயக்குனர் கூறியதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் பார்வதி. தனது சர்ச்சை பேச்சு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தன்னை படத்தில் நடிக்க அழைத்த மம்முட்டியின் பெருந்தன்மை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் புகழ்ந்து கூறியுள்ளார் பார்வதி.




