காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

மலையாள திரை உலகில் மறைந்த நடிகர் சுகுமாரனின் மனைவியும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் தனது மகன்கள் பிரித்விராஜ் மற்றும் இந்திரஜித் இருவரும் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வருவதை சந்தோஷத்துடன் கவனித்து வருகிறார். இளைய மகன் பிரித்விராஜ் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் நடிக்க துவங்கி டைரக்ஷன், நடிப்பு என பிசியாக இருக்கிறார். அதேசமயம் மூத்த மகன் இந்திரஜித் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் சர்வம், என் மன வானில் உள்ளிட்ட இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை மல்லிகா சுகுமாரன் அளித்த ஒரு பேட்டியில், “எனது மூத்த மகன் இந்திரஜித் விரைவில் டைரக்ஷனில் இறங்கப் போகிறார், அதற்கான கதையும் தயாராகி விட்டது. தற்போது ஹிந்தியில் அனுராக் காஷ்யப்புடன் ஒரு படம் மற்றும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி டைரக்ஷனில் ஹிந்தியில் இன்னொரு படம் மற்றும் மலையாளத்தில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவற்றை முடித்துவிட்டு அடுத்ததாக டைரக்ஷனிலும் இறங்க இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
தம்பியை போல அண்ணனும் டைரக்ஷனில் சாதிப்பார் என எதிர்பார்க்கலாம்.