வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் 'துரந்தர்' திரைப்படம் வெளியானது. ஆதித்யா தர் இயக்கிய இந்த படத்தில் முக்கியமான இடங்களில் அக்ஷய் கன்னா மற்றும் மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனாலும் நாயகன் ரன்வீர் சிங்கை விட அக்ஷய் கன்னா நடித்திருந்த 'ரஹ்மான் டகாய்ட்' என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 1300 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளது.
இந்த படத்தில் நடிக்க முடியவில்லையே என்று நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் தங்களது வருத்தங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அக்ஷய் கன்னா கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா தான் நடிக்க வேண்டி இருந்தது என்றும், அவர் 'குபேரா' மற்றும் 'கூலி' படங்களில் நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரவியது.
ஆனால் சமீபத்தில் இது குறித்து வெளிப்படையாகவே பேசிய நாகார்ஜுனா அந்த தகவலில் எந்த உண்மையையும் இல்லை என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல, “இயக்குனர் ஆதித்யா தர் டைரக்சனில் வெளியான 'உரி' திரைப்படத்திலிருந்து அவரை நான் ரசித்து வருகிறேன். துரந்தர் படம் உண்மையிலேயே அருமையான படம். இன்னொரு வெற்றி படமாக அமையப்போகும் இதன் இரண்டாம் பாகத்தையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.




