ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கிட்டத்த நூறு படங்களை நெருங்கும் தயாரிப்பு நிறுவனமான ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் படத்தை தயாரிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டது மலையாளத்தில் தயாராகும் இந்தப்படத்தின் டைட்டில் ஹனுமன் கியர் என்றும் மற்ற மொழிகளில் இந்த படம் டாப் கியர் என்கிற பெயரில் வெளியாகும் என்றும் இரண்டு போஸ்டர்களையும் வெளியிட்டது.
அதேசமயம் ஏற்கனவே தெலுங்கில் டாப் கியர் என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. சூப்பர்குட் பிலிம்ஸின் அறிவிப்பால் அதிர்ச்சியான அந்த படத்தின் தயாரிப்பாளர், தாங்கள் ஏற்கனவே டாப் கியர் என்கிற பெயரில் ஒரு படத்தை எடுத்து, அந்தப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறியதாக மீடியாவில் ஒரு செய்தி வெளியானது.
இந்த நிலையில் தாங்கள் அறிவித்த டைட்டிலை மாற்றிக் கொள்வதாக கூறி இந்த பிரச்சனைக்கு சுமுகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம் ஆர்பி.சவுத்ரி. சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆர்பி.சவுத்ரியை நேரில் அணுகி இந்த விஷயத்தை சுட்டிக்காட்டியதும், உடனே எங்களுக்கு இதுபற்றி தெரியாமல் போய்விட்டது என்றும் இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை நாங்கள் தெலுங்கில் எங்களது படத்தின் டைட்டிலை மாற்றிக் கொள்கிறோம் என்று பெருந்தன்மையுடன் கூறினாராம் ஆர்பி சவுத்ரி. மேலும் அந்த தயாரிப்பு நிறுவனம் இது சம்பந்தமாக அறிக்கை என எதையும் வெளியீட்டு இதை ஒரு பெரிய பிரச்சனை ஆகாமல், நேரடியாக எங்களை தொடர்பு கொண்டது மகிழ்ச்சி என்றும் அதற்காகவே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளாராம் ஆர்பி சவுத்ரி.