வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

மலையாள நடிகர் ஜெயசூர்யா தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் தற்போது பிரம்மாண்ட வரலாற்றுப் படமாக உருவாகி வரும் 'கத்தனார்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2023ல் சுவாதிக் ரஹீம் என்பவர் துவங்கிய சேவ் பாக்ஸ் என்கிற நிறுவனத்திற்கு விளம்பர தூதராக ஒப்பந்தமானார் ஜெயசூர்யா. அந்த நிறுவனம் தனது முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாதி ரஹீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த செயலியின் விளம்பர தூதராக ஜெயசூர்யா இருந்ததால் அவரையும் அமலாக்கத்துறை அவ்வப்போது அழைத்து விசாரணை நடத்தி வந்தது. அந்த வகையில் கடந்த திங்கள்கிழமையும் அமலாக்கத்துறை முன்பு தனது மனைவியுடன் விசாரணைக்கு ஆஜர் ஆனார் ஜெயசூர்யா. நடிகர் ஜெயசூர்யாவுக்கு இந்த சேவ் பாக்ஸ் செயலி நிறுவனத்தின் உள்நோக்கம் மற்றும் அதன் நடைமுறைகள் நிஜமாகவே தெரிந்திருந்ததா, இல்லை அவர் அதை அறியவில்லையா என்பது குறித்து எல்லாம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
மேலும் அவரிடம் சேவ் பாக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அவரது வங்கி கணக்கு நடைபெற்ற பண பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெயசூர்யாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி வைத்துள்ளது.




