இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு |
பான் இந்தியா, ஓடிடி…. கடந்த இரண்டு வருடங்களாக நாம் அடிக்கடிப் பார்க்கும், பேசும் வார்த்தைகள். கடந்த இரண்டு வருடங்களில் சில முன்னணி நடிகர்களின், இயக்குனர்களின் படங்கள் '5 மொழிகளில், பான் இந்தியா வெளியீடு' என்று பரபரப்பாகப் பேச வைக்க முயற்சிக்கிறார்கள். தியேட்டர்களில் மட்டுமல்ல ஓடிடியிலும் ஒரே சமயத்தில் 200 நாடுகளில் வெளியீடு என விளம்பரப்படுத்துகிறார்கள்.
அப்படி வரும் படங்களில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்து பல கோடிகளை வசூலிக்கிறது. கடந்த பத்து மாத காலத்திற்குள் மற்ற மொழிகளில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளியான படங்களில் 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் தமிழிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று லாபகரமான படமாக அமைந்தது. ஆனால், அப்படி வெளியான வேறு சில படங்கள் இங்கு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தி வசூலைத் தரத் தவறிவிட்டன.
குறிப்பாக பிரபாஸ் நடித்து தெலுங்கில் தயாராகி இங்கு டப்பிங் ஆகி வெளிவந்த 'ராதே ஷ்யாம்', அமீர்கான் நடித்து ஹிந்தியில் தயாராகி இங்கு டப்பிங் ஆகி வெளிவந்த 'லால் சிங் சத்தா', சுதீப் நடித்து கன்னடத்தில் தயாராகி இங்கு வெளிவந்த 'விக்ராந்த் ரோணா' படங்கள் இங்கு தோல்வியைத் தழுவின.
அடுத்து விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ள 'லைகர்' படம் நாளை(ஆக.,25) பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுக்கு இங்கும் ரசிகர்கள் உண்டு. அவர்களைக் கவர்ந்து 'லைகர்' ரசிகர்களின் லைக்குகளைப் பெறுமா என்பது நாளை தெரிந்துவிடும்.