பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களின் படங்கள், ஹிட்டான படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்கள் வெளியாகும் போது அந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட படக்குழுவினர், ஹீரோ, ஹீரோயின்கள் அதிக ஆர்வம் காண்பிப்பதில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'சச்சின், குஷி' படங்கள் குறித்து அதில் நடித்த விஜய் பேசவில்லை. ஒரு டுவிட் கூட போடவில்லை. ஏன் அந்த படத்தை பார்க்க கூட இல்லை என தகவல்.
இப்போது சூர்யாவின் 'அஞ்சான்' ரீ ரிலீஸ் ஆகிறது. ஆனால் சூர்யா படம் பார்க்கவில்லை. அவர் ஊட்டியில் படப்பிடிப்பில் இருக்கிறார் என தகவல். ஹீரோயின் சமந்தாவும் அஞ்சான் ரீ ரிலீஸ் குறித்து எதுவும் பேசவில்லை. கடந்த வாரம் 'ப்ரண்ட்ஸ்' ரீ ரிலீஸ் ஆன நிலையில் ரமேஷ் கண்ணா தவிர யாரும் படம் பற்றி பேசவில்லை. தங்கள் படம் இத்தனை ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆனாலும் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் உற்சாகம், ஆர்வம் இன்றி இருப்பதாக கூறுகின்றனர். ரீ ரிலீசால் தங்களுக்கு எந்த பலனும் இல்லை என்று அவர்கள் நினைப்பதால் கப்சிப் என்கின்றனர்.