'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? | பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ் | 'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி 2017ல் வெளிவந்த படம் 'ஸ்பைடர்'. இப்படம் இரண்டு மொழிகளிலுமே படுதோல்வியைத் தழுவியது. இப்படம் மூலம் பிறந்து வளர்ந்த தமிழிகத்தில் தடம் பதிக்கலாம் என நினைத்த மகேஷ்பாபுவுக்கு மிகப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், 'ஸ்பைடர்' படத்தின் தோல்வி எனது திரையுலகப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியது. இயக்குனர் முருகதாஸ், மகேஷ்பாபு கூட்டணி மிகப் பெரும் வெற்றியைத் தரும் என எதிர்பார்த்திருந்தேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அப்படத் தோல்விக்குப் பிறகு ரகுலுக்கு தெலுங்கில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் வரவில்லை. கடந்த சில வருடங்களாகவும் அவர் எந்த தெலுங்குப் படத்திலும் நடிக்கவில்லை.
தமிழில், “யுவன், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், இந்தியன் 2,' ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரகுல்.