ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி 2017ல் வெளிவந்த படம் 'ஸ்பைடர்'. இப்படம் இரண்டு மொழிகளிலுமே படுதோல்வியைத் தழுவியது. இப்படம் மூலம் பிறந்து வளர்ந்த தமிழிகத்தில் தடம் பதிக்கலாம் என நினைத்த மகேஷ்பாபுவுக்கு மிகப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், 'ஸ்பைடர்' படத்தின் தோல்வி எனது திரையுலகப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியது. இயக்குனர் முருகதாஸ், மகேஷ்பாபு கூட்டணி மிகப் பெரும் வெற்றியைத் தரும் என எதிர்பார்த்திருந்தேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அப்படத் தோல்விக்குப் பிறகு ரகுலுக்கு தெலுங்கில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் வரவில்லை. கடந்த சில வருடங்களாகவும் அவர் எந்த தெலுங்குப் படத்திலும் நடிக்கவில்லை.
தமிழில், “யுவன், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், இந்தியன் 2,' ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரகுல்.




