தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் 'கைதி'. கார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்த அப்படம் வித்தியாசமான படமாக அமைந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. தமிழ்த் திரையுலகமே லோகேஷைத் திரும்பிப் பார்த்தது. அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்தில் ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், 'கூலி' படத்தை இயக்கிய பின் லோகேஷ், அவரே கதாநாயகனாக நடிக்கும் ‛டிசி' படத்தில் பிஸியாகிவிட்டார். இதனால், 'கைதி 2' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது கேள்வியாகவே இன்னும் தொடர்கிறது. இதனிடையே, லோகேஷ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளதாம்.
கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அடுத்து அவர் நடித்துள்ள 'சர்தார் 2' வெளியாகும். தற்போது 'மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு 'கைதி 2' ஆரம்பமாகுமா அல்லது அடுத்த வருடத்திற்குத் தள்ளிப் போகுமா என்பது போகப் போகத் தெரியும்.d