அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு |

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஆனால் இவர் மற்ற நடிகர்களை போன்று இல்லாமல் தான் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அருண் ராஜா காமராஜ் (கனா), கார்த்திக் வேணுகோபால் (நெஞ்சமுண்டு நேர்மையுண்டு), சிபி சக்ரவர்த்தி (டான்), பி.எஸ்.வினோத்ராஜ் (கொட்டுக்காளி), டி.ராஜவேல் (ஹவுஸ்மேட்), சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி) ஆகியோர் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள்.
இவர்கள் வரிசையில் அடுத்து தனது எஸ்.கே புரொடக்ஷன் சார்பில் தயாரிக்க இருக்கும் 10வது படத்தை அம்மாமுத்து சூர்யா என்பவர் இயக்குவதாக அறிவித்துள்ளார். 'தாய்கிழவி' படத்தின் வெற்றி விழாவில் இதனை அறிவித்தார். தற்போது அம்மாமுத்து சூர்யா ஸ்கிரிப்ட் தயாரிப்பு பணியில் இருப்பதாகவும் அந்த பணிகள் முடிந்த உடன் படப்பிடிப்பு செல்ல இருப்பதாகவும், இது இளைஞர்களுக்கான காதல் மற்றும் ரொமான்ஸ் படமாக இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் கூறினார்.
அம்மாமுத்து சூர்யா, முன்னதாக ஆர்.ஜே.பாலாஜியை வைத்து 'ஹேப்பி எண்டிங்' எனும் படத்தை இயக்கினார். படத்தின் டைட்டில் டீசர் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், சில பிரச்னைகளால் அப்படம் நின்றது. அதன்பிறகு, தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படம் மூலம் அறிமுகமாக உள்ளார் அம்மாமுத்து சூர்யா.