கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஹிந்தித் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தீபிகா படுகோனே. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக அவர் நடிக்க இருந்த 'ஸ்பிரிட்' படத்திலிருந்து முதலில் நீக்கப்பட்டார். அதன்பின் 'கல்கி 2898 ஏடி' படத்திலிருந்தும் நீக்கப்பட்டார். 'ஸ்பிரிட்' படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிறைய உதவியாளர்கள் கேட்கிறார், 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பேன் என கண்டிஷன் போடுகிறார் என அவர் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது.
மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இதுவரையில் எதுவும் பேசாமல் இருந்தவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான பதிலைத் தந்திருக்கிறார்.
“நான் பெயர்களை சொல்ல விரும்பவில்லை அல்லது இதை பெரிய விஷயமாக்க விரும்பவில்லை. ஆனால் பல ஆண் நடிகர்கள் பல ஆண்டுகளாக தினசரி 8 மணி நேரம் வேலை செய்கின்றனர், திங்கள் முதல் வெள்ளி வரை, அவர்கள் வார இறுதிகளில் வேலை செய்வதில்லை என்பது பரவலாக அறியப்பட்டது. இப்போது, பல பெண்களும் புதிய தாய்மார்களும் 8 மணி நேர ஷிப்ட்களில் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர், ஆனால் அது ஒருபோதும் தலைப்புச் செய்திகளில் வருவதில்லை.
எனது தொழில் வாழ்க்கை முழுவதும் இதை எதிர்கொண்டுள்ளேன். சம்பளம் உள்ளிட்ட, எனக்கு வரும் எதையும் சமாளிக்க வேண்டியிருந்தது. நான் எப்போதும் எனது போராட்டங்களை அமைதியாக போராடியுள்ளேன். சில சமயங்களில் அந்த போராட்டங்கள் பொதுவில் வருகின்றன, அது நான் வளர்க்கப்பட்ட விதம் அல்ல. ஆனால் அவற்றை அமைதியாகவும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வதை நான் நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.