பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. தெலுங்கில் 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவும், இல்லை, இல்லை நீக்கப்பட்டார் என்றும் செய்திகள் வந்தன. அதற்கடுத்து 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.
தீபிகா, ரன்வீர் சிங் தம்பதியினருக்கு ஒரு வயதியில் பெண் குழந்தை உள்ளது. குழந்தையையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்க முடியாது என அவர் கறாராக சொல்லிவிட்டார், அதனால்தான் அவரைப் படத்திலிருந்து நீக்கினார்கள் என்ற ஒரு பரபரப்பு எழுந்தது.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து தீபிகா, “100 கோடி அல்லது ரூ. 500-600 கோடி படங்கள் என்பது இனிமேல் யோசிக்கத் தேவையில்லை. சில சமயங்களில் அதிக பணம் கொடுத்து அது போதும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது போதாது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை போதும். ஆரோக்கியமாக இருக்கும் போது மட்டுமே உங்கள் சிறந்ததை கொடுக்க முடியும்,” என்று கூறியுள்ளார்.