ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
ரஜினிகாந்த் நடிப்பில் ‛கூலி' திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் டைரக்சனில் ‛ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை கேரள தமிழக எல்லையில் பொள்ளாச்சி அருகே இருக்கும் அட்டப்பாடி பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த சமயத்தில் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான தேவன், ரஜினிகாந்தை ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சந்தித்து பேசியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1995ல் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‛பாட்ஷா' படம் வெளியான போது அதில் ரஜினிகாந்த், ரகுவரன், ஆனந்தராஜ் ஆகியோருக்கு அடுத்தபடியாக பேசப்பட்ட கேசவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தேவன். அந்த படம் அவருக்கு தென்னிந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இடையில் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினியும், நானும் எவ்வாறு நெருங்கி பழகினோம் என்றும் ரஜினியின் முதல் காதல் பற்றியும் கூட தேவன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்துள்ளார் தேவன்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தபோது அட்டப்பாடி பகுதியில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடைபெறுவதாக கேள்விப்பட்டு அவரை பார்த்துவிட்டு போகலாம் என எந்த முன்னறிவிப்பு இன்றி தான் அங்கே சென்றேன். படப்பிடிப்பில் இருந்த ஒரு உதவியாளரிடம் என்னுடைய பெயரை சொல்லி ரஜினியை பார்க்கலாமா என்று அனுமதி கேட்டு விட்டு வரச் சொன்னேன். ஆனால் நான் சொல்லி அனுப்பிய நபர் வருவதற்குள்ளாகவே இன்னொரு நபரை விட்டு என்னை அழைத்து வரச் செய்தார் ரஜினிகாந்த். என்னை தூரத்திலிருந்து அவர் பார்த்து விட்டார். நான் அருகில் வந்ததும் என்னை கட்டித் தழுவி எப்படி இருக்கிறீர்கள் என விசாரித்தார். பாட்ஷா படப்பிடிப்பில் அவரை முதன்முறையாக பார்த்தபோது எப்படி அன்பை வெளிபடுத்தினாரோ அதே அன்பை இப்போதும் பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை அவரிடம் பேசிக் கொண்டிருந்த விட்டு விடைபெற்றேன்” என்று கூறியுள்ளார் நடிகர் தேவன்.